top of page
  • Rajnarayan Dube

“வருக! வருக!! மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) –வரவேற்கிறது தமிழகம்!


நவம்பர் 30, 2019 தமிழ் ( Tamil ) சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியிருக்கிறது. அன்றைய தினம் தேசப்பற்றாளரும், தொலைநோக்கு சிந்தனைகள் கொண்ட திரைக்கலைஞருமான மெகாஸ்டார் ஆஸாத் ( Megastar Aazaad ) அவர்கள், தனது பிரமாண்ட தமிழ் (Tamil) திரைப்படமான மகா நாயகனின் (Mahanayakan) ஃபர்ஸ்ட் லுக் ( FIRST LOOK ), மற்றும் போஸ்டரை (POSTER) சென்னையில் (Chennai) வெளியிட்டதன் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டார் என்றே கூறலாம்.


இராணுவ பள்ளியில் கல்வி பயின்றவரும், ஆழ்ந்த தேசப்பற்று

கொண்டவருமான மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்களின் முதல் திரைப்படம் ஹிந்தியில் (Hindi) ராஷ்ட்ரபுத்ரா (Rashtraputra) என்ற பெயரிலும் சமஸ்கிருதத்தில் (Sanskrit) அஹம் ப்ரம்மாஸ்மி (Aham Brahmasmi) என்ற பெயரிலும் வெளிவந்து உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படம் கடந்த மே 21, 2019 அன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) ரசிகர்களின் மிகப்பெரிய ஆராவாரத்துக்கு நடுவில் திரையிடப்பட்டது. அப்போது சமஸ்கிருத (Sanskrit) மொழியில் வெளியாகியிருக்கும் முதல் திரைப்படமான அஹம் ப்ரம்மாஸ்மி (Aham Brahmasmi), அம்மொழிக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. இதன் மூலம் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்கள் கலாச்சார மறுமலர்ச்சியின் ஒரு அடையாளமாகவே உருவெடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தியாவின் (India) ஆன்மீகத் தலைநகரமான காசியிலும் (Kashi), அரசியல் தலைநகரமான டெல்லியிலும் (Delhi) இருக்கும் சமஸ்கிருத (Sanskrit) நேசர்களிடம் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.


மெகாஸ்டார் ஆஸாத் (MegastarAazaad)அவர்களை,உலகமெங்கும் சமஸ்கிருதத்தை பரப்ப வந்திருக்கும் தூதுவராகவே சமஸ்கிருதத்தை நேசிக்கும் மக்கள் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர். இதனைத் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய கௌரவமாகவும் பொறுப்பாகவும் கருதுகிறார் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்கள்.

ஹிந்தியிலும் (Hindi) சமஸ்கி ருதத்திலும் (Sanskrit) தனது படைப்பாற்றலின் மூலம் பிரமாண்ட வெற்றியைக் குவித்த மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்கள், தற்போது தன் கவனத்தை தமிழ் (Tamil) திரைப்பட உலகின் மீது திருப்பியிருக்கிறார். தனது பிரமாண்டமான படைப்பான மகா நாயகன் (Mahanayakan) திரைப்படத்தை தமி ழில் (Tamil) எடுப்பதன் மூலம் மிகப் பழமையானதும் செம்மொழியுமான தமிழ் (Tamil) மொழியை உலகமெங்கும் பரப்பி அம்மொழிக்கு மரியாதை செலுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தியக் (India) கலாச்சாரங்களின் இணைப்புப் பாலமாக செயல்படவே தான் தமிழ்த் (Tamil) திரையுலகில் காலடி எடுத்து வைத்திருப்பதாகவும், தனது திரைப்படங்கள் மூலம் இந்தியாவின் (India) வட (North) மற்றும் தென் (South) பகுதிகளை கலாச்சார ரீதியாக இணைப்பதே தனது முதன்மையான நோக்கம் என்றும் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்கள் தனக்கே உரிய பாணியில் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.


இவ்விழாவில் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்களுக்கு தமிழ் (Tamil) கலாச்சாரப்படி பொன்னாடை போர்த்தி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டுக்கோப்பான, அதேநேரம் உற்சாகம் மிகுந்த ரசிகர்களால் நிரம்பியிருந்த விழா அரங்கம், பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தனது பெயரைச் சொல்லி மகிழ்ச்சி ஆராவாரம் செய்த தன் ரசிகர்களைக் கண்டு மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) மிக்க உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் தனது உரையை இனிய தமிழில் (Tamil) தொடங்கி பிறகு ஆங்கிலத்திலும் (English) ஹிந்தியிலும் (Hindi) தொடர்ந்தார். ரசிகர்களைத் தனது பேச்சால் கட்டிப்போடும் கலை மெகாஸ்டார் ஆஸாத்திடம் (Megastar Aazaad) நிரம்பியிருப்பதை அப்போது காணமுடிந்தது. தனது தன்னம்பிக்கை நிரம்பிய உரையால் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மனதில் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்திவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) ரசிகர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடிய நிகழ்வும் நடந்தது. அதைக் கலந்துரையாடல் என்று கூறுவதை விட இதயங்களுக்கு இடையிலான ‘உணர்வு பரிமாற்றம்’ என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.


மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்களின் உரையை உன்னிப்பாகக் கவனித்த ரசிகர்கள், அதிலிருந்த ஆழமான கருத்துக்களை உள்வாங்கி, ஏற்றுக்கொண்டு அவற்றை வெகுவாகப் பாராட்டியதையும், அப்போது அவர்களின் கண்களில் அளவிடமுடியாத நம்பிக்கை தெரிவதையும் நம்மால் காணமுடிந்தது. தனது சிறப்பான பேச்சாற்றல் மூலம் தமிழ் (Tamil) ரசிகர்களின் மனதை மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்கள் முழுமையாக வென்றுவிட்டார். விண்ணைப்பிளக்கும் கரவொலிகளுடன் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்களை ரசிகர்கள் வரவேற்றதே அதற்கு சான்று.


தமிழ் (Tamil) திரைப்பட உலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள்,

பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறிவுசார் பெருமக்கள் நிரம்பியிருந்த விழா மேடையில் பேசிய மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்களின் உரையில், தமிழ் மொழியையும் தமிழ் (Tamil) திரைப்படங்களையும் உலக அளவில் நிச்சயம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உறுதியும் உத்வேகமும் தெரிந்தது. மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) தமிழ் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்திருப்பது வட இந்தியாவுக்கு பரசுராமரும் (Parshurama) ஆதி சங்கரரும் (Aadya Shankaracharya), சென்றதற்கு ஈடானது என ரசிகர்கள்

பேசிக்கொள்வதைக் கேட்க முடிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் ஈடுபாட்டையும் மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்கள் மேல் காட்டிய ரசிகர்கள், கலைத்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பின் மூலம் விரைவில் ஒரே இந்தியா, ஒன்று பட்ட இந்தியா , பரந்த இந்தியா (India) மற்றும் ஈடு இணையற்ற இந்தியா போன்ற கனவுகள் நனவாகப் போவதாக நம்பிக்கை தெரிவித்தனர். மெகாஸ்டார் ஆஸாத் (Megastar Aazaad) அவர்களின் திறமை, முயற்சி, அர்ப்பணிப்பு இவைகளால் வடஇந்தியாவுக்கு திருவள்ளுவரும் , சுப்பிரமணிய பாரதியாரும் (Subramanya Bharathi) கொண்டு சேர்க்கப்படும் அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு காளிதாசர் (Kalidasa) மற்றும் பாவ்பூதி (Bhavbhuti) போன்ற சான்றோர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.


மகா நாயகன் (Mahanayakan ), ராஷ்ட்ரபுத்ரா (Rashtraputra) மற்றும் அஹம் பிரம்மாஸ்மி (Aham Brahmasmi) ஆகிய பிரமாண்ட திரைப்படங்களை, இந்திய திரைப்படத்துறையின் தூணாக விளங்கிய ராஜ்நாராயண் தூபே (Rajnarayan Dube) அவர்கள் உருவாக்கிய ‘தி பாம்பே டாக்கீஸ் ஸ்டூடியோஸ்’ (The Bombay Talkies Studios), ‘பாம்பே டாக்கீஸ் பவுண்டேஷன்’ (Bombay Talkies Foundation), ‘விஸ்வ சாஹித்ய பரிஷத்(Vishwa Sahitya Parishad) ஆகிய நிறுவனங்களின் சார்பாக தேசப்பற்றாளரும் பெண் தயாரிப்பாளருமான காமினி தூபே (Kamini Dube), ஆஸாத் பெடரேஷனுடன் (Aazaad Federation) இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

bottom of page